ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகி வேறோரு அணிக்கு செல்ல வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விராட் கோலி தலைநகருக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஒரு டுவிட்டர் பதிவை கெவின் பீட்டர்சன் வெளியிட்டுள்ளார். அதாவது டெல்லி அணிக்கு விராட் கோலி செல்ல வேண்டும் என்பதை அப்படி மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இது ஆர்சிபி வீரர்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 61 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி 197 ரன்கள் எடுத்த நிலையில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அந்த அணியில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார். குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.