நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு விவரங்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 58.14 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 16 பேர் நெல்லை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1064 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும்,  67 மாடுகள், 54 ஆடுகள், 135 கன்றுகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 28,392 கோழிகள் உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.