திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.  இதில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, தேனி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், ஆரணி, திருவள்ளூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், அரக்கோணம், கோவை, புதுச்சேரி ஆகிய 16 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் தன் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கும் திமுக 7 சீட்டு மட்டும் தர முடிவு செய்துள்ளதாம். இது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.