பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் அளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனாத தள கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்திருந்த நிதிஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவில் இன்று மாலை மீண்டும் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் முற்றிலுமாக விலகி இருக்கிறார்.