சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி துறையானது, அமைச்சர் ராஜகண்ணியப்பனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கிடப்பட்டதற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார்.

முதலமைச்சருடைய பரிந்துரையை தமிழக கவர்னர் ஏற்று உள்ளார். தமிழக உயர்கல்வி துறை,   அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக கொடுப்பதற்கான பரிந்துரை ஏற்றுக் கொண்டுள்ளார்.  ஏற்கனவே ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

அவருக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் காந்திக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ராஜ்பவன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பை  தற்போது கவர்னர் உடைய செயலாளர் வெளியிட்டு இருக்கிறார்.

இதன் மூலமாக இன்றிலிருந்து அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நாளை முதல்  இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. அவர் தென் மாவட்டங்களில் தற்போது முதலமைச்சருடன் இருக்கின்றார்.