தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைவரும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்தனர். ஆனால் இன்னும் ஏளமான மக்கள் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் தமிழ்நாடு மின்வாரியம் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. அதன்படி டிசம்பர் 31-ஆம் தேதியோடு கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் எனவும் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காமல் இருக்கும் பொது மக்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.