ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அக்ரஹாரம் வாக்குச்சாவடியில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என வாக்காளர்கள் புகார் அளித்தனர். இன்று காலை முதல் குடிநீர் வசதி இல்லை என வாக்காளர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது குடிநீர் கேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.