முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படும். இதே போல அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது.