தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.