தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்படும்.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு பிப்ரவரி மூன்றாம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 24ஆம் தேதி நாளை முதல் பதிவிறக்கம் செய்ய தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.