பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் முடிந்து போன சர்ச்சையை மீண்டும் கிளப்பி ரஜினி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பருந்து, காக்கா கதை ஒன்றை  கூறியிருந்தார். அதில் யார் பருந்து ? யார் காக்கா ? என அந்த உரையாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தவே,  பலரும் இந்த உரையாடல் குறித்து  தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பேசிப் பேசி பெரும் பேசு பொருளாக்கி விட்டனர். தற்போது ஜெயிலர்  திரைப்படம் வெளியாகி பெரும் வசூல்  சாதனை படைத்து, தற்போது OTT-யிலும்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மீண்டும் பருந்து, காக்கா சர்ச்சையை தற்போது ட்விட் ஒன்றின் மூலம் மீண்டும் கிளப்பியுள்ளார். அதில், உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என யார் உனக்கு கூறியது ? தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என ஏன் கருதிக் கொள்கிறாய்? வைரம் பூமிக்கு மிக மிக கீழே கிடைக்கிறது. உயரத்தில் அல்ல. என பேரறிஞர் அண்ணா கூறியதை குறிப்பிட்டு, பருந்து காக்கா கதையை  கூறிய பண்டிதர் கவனத்திற்கு என ரஜினியை சாடி ட்விட்  செய்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்ப, ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.