ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரத்தில் என்னை தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம்.

ஒரு சகோதரி, யூ டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே. அந்த யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.