தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு,  எவ்வாறு,  நடத்துவது என்பது பற்றியும் விவாதித்தோம் ?

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து இருக்கின்றோம். மேல்முறையீடு மூலம் சட்டப் போராட்டம் ஒரு பக்கம், மக்களை சந்திக்கின்ற புரட்சி பயணம் இன்னொரு பக்கமும் தொடரும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும். தேர்தல் வரட்டும் தீர்மானிப்போம்.

எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் ஏற்கனவே என்ன முடிவெடுத்தோமோ, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.  பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் ? என்பது எங்களுக்கு தெரியாது. பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்து நாங்களும், அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்களும் சேர்ந்து என்ன முடிவு எடுக்க வேண்டுமோ,  அதை எடுப்போம் என தெரிவித்தார்.