தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா மூன்றாவது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்துச் சொந்த ஊரில் பணி வேண்டும் என சங்கர் காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பணியிட மாற்றம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சங்கர் கடந்த நான்கு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். நேற்று அதிகாலை சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.