தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை காளியப்பர் தெருவில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவராக்ன நிர்மல் ராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிர்மல் ராஜின் நண்பர் சிம்சனின் உறவினர் ஒருவருக்கும் நிர்மல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த மூன்று பேரும் இணைந்து நிர்மல் ராஜை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த நிர்மல்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.