தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மனைவி ஆவார். நடிகை ராதிகா சின்னத்திரையில் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சீரியல்களை தயாரித்து வருகிறார்.

இதுவரை சன் டிவி சீரியல்களை தயாரித்து வந்த ராதிகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற புதிய சீரியலை தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகன் சிங்கப்பூரில் படிக்கிறார். தன்னுடைய மகனை வெளிநாட்டில் விட்டுவிட்டு திரும்பும் போது ராதிகா அவரை கட்டியணைத்து அழுதுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவையும் நடிகை ராதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.