தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நடிப்பில் உருவாக்கப்பட்ட உள்ள திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்த  திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சிவாங்கி உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போதும் தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

அதில் இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் 1.75 கோடி கடன் வாங்கியதாகவும் அதனை திருப்பி செலுத்தி விட்டு படத்தை வெளியிட வேண்டும் என்றும் சொன்னதை பிரசாந்த் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.