தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த வாத்தி திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகி 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தென்காசியில் நடைபெற்ற போது படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு காட்சியை படமாக்கியுள்ளனர். இந்த குண்டு சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதாவது வனத்துறையிடம் கேப்டன் மில்லர் பட குழுவினர் அனுமதி பெறவில்லை என்பதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புக்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு சூட்டிங் நடத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிரச்சினைகள் நீங்கி படப்பிடிப்பு மீண்டும் அதே இடத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.