தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வாடிவாசல் படத்தின் சூட்டிங் தொடங்கிய நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தற்போது படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கலைப்புலி எஸ். தாணு உலகத்தமிழர்களுக்கு ஒரு விடியல் வாடிவாசல். இப்படம் உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கும். இந்த படம் உலக தமிழர்கள் அனைவரும் உச்சம் பெறக்கூடிய படமாக அமையும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தற்போது வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.