அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கழகத்தின் முன்னோடிகள் எல்லாம் எதற்காக இந்த கூட்டம் ? என்பதை பற்றி எல்லாம் என்று சிறப்பாக உங்களிடம் சொன்னார்கள். வருகின்ற ஏப்ரல்,  மே மாதத்திலே நடக்கின்ற பாராளுமன்ற தேர்தல். அதை தொடர்ந்து நடக்க இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தல் ஆகியவற்றில் நீங்கள் தயாராகின்ற விதமாக ,

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கழகப் பணியை ஆற்றி வருகின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  என் என்கின்ற இந்த மக்கள் இயக்கத்தை தினந்தோறும் அந்தந்த பகுதிகளே இயக்கிக் கொண்டிருக்கின்ற கழகத்தின் அஸ்திவாரங்களாகிய கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  நிர்வாகிகளும் இங்கே வருகை புரிந்திருக்கிறது.

நாம் 2017 இந்த இயக்கத்தை தொடங்கிய போதிலிருந்து இன்று வரை தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கத்தை லட்சோப லட்சம் தொண்டர்கள் நமக்கு துணையாக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் பிரதிநிதிகளாக… கோவை மாவட்ட பிரதிநிதிகளாக….  இந்த இயக்கத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு செல்கின்ற பொறுப்பிலே உள்ள அனைவருக்கும் இங்கே கூடி இருக்கிறீர்கள். யாரோ ஒரு சிலர் சுயநலத்திற்காக…. சுயலாபத்திற்காக விலை போய் இருக்கலாம்.

ஆனால் கொண்ட கொள்கையும்,  நமது லட்சியத்தையும் நிறைவேற்றுகின்ற வரை ஓய மாட்டோம் என்று என்னோடு தமிழ்நாடு முழுவதும் உங்களைப் போன்ற இலட்சோப லட்சம் நல்ல உள்ளங்கள் இணைந்து என்னோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்மை பார்த்து சிலர் சொல்கிறார்கள்…   பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று….  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஏதோ டெண்டர் பார்ட்டிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என தெரிவித்தார்.