பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டாஸில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பேனரை சேதப்படுத்திய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். மூன்றாவதாக நுங்கம்பாக்கத்தில் போலீசார் உடன் தகராறு ஈடுபட்ட வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

தென்காசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வழக்குகளில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4ஆவது வழக்கிலும் கைது செய்யும் நடவடிக்கையை  தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அமர் பிரசாத் ரெட்டிக்கு குண்டாஸ் நடவடிக்கையை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என பாஜகவினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.