குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி புலிப்படை கட்சி தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆனந்த், பிரபா, முருகன், தினேஷ், பிரபாகரன் போன்றோர் அந்த கட்சியினர் தேசிய கொடியுடன் நேற்று தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தனர். ஆனால் மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி கொடுத்து சிலையிடம் மனு கொடுப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலவஞ்சி போஸ் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more