குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி புலிப்படை கட்சி தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆனந்த், பிரபா, முருகன், தினேஷ், பிரபாகரன் போன்றோர் அந்த கட்சியினர் தேசிய கொடியுடன் நேற்று தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தனர். ஆனால் மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி கொடுத்து சிலையிடம் மனு கொடுப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலவஞ்சி போஸ் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!
Related Posts
“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…
Read more“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…
Read more