குடியரசு தினத்தை முன்னிட்டு கட்ச தீவில் காவி புலிப்படை கட்சி சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்துவிட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் காவிரி புலிப்படை கட்சி தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆனந்த், பிரபா, முருகன், தினேஷ், பிரபாகரன் போன்றோர் அந்த கட்சியினர் தேசிய கொடியுடன் நேற்று தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தனர். ஆனால் மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி கொடுத்து சிலையிடம் மனு கொடுப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலவஞ்சி போஸ் உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
“ராஜராஜ சோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு”… 8 பேரை கைது செய்த போலீசார்…!!!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more