இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது பெலிகன் பறவையின் வாய் மிகவும் பெரிதாக இருக்கிறது. இதன் காரணமாக அதனால் சுலபமாக பெரிய அளவிலான பொருள்களை கூட விழுங்க முடியும். இந்நிலையில் இந்த வீடியோவில் அந்த பெலிகன் பறவையின் வாயின் ஒரு பகுதியை ஒருவரும், மற்றொரு பகுதியை இன்னொருவரும் பிடித்துக் கொண்டு அந்தப் பறவை விழுங்கிய முயல் குட்டிகளை, ஒருவர் பறவையின் வாய்க்குள் கையை விட்டு எடுக்கிறார்.

தொடர்ந்து அவர் 3,4 முயல் குட்டிகளை அந்த பறவையின் வாயில் இருந்து எடுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.