
தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைதியோடு பொறுமையோடு அனைவரின் பேச்சையும் நீங்கள் உன்னிப்பாக கவனித்து எதிர்காலத்தில் என்ன பல நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும், பணிகளை ஆற்ற வேண்டும்.
எங்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த தர்மயுத்தம் ஆரம்பித்த நாளிலிருந்து எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் புரட்சி தொண்டர்களே… அனைவருக்கும் என்னுடைய நன்றியை வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
இங்கு பல்வேறு கருத்துக்கள் எனக்கு முன்னாலே பேசிய தலைமை கழகத்தினுடைய ஆற்றின் மிகுந்த நிர்வாகிகள் எடுத்து வைத்தார்கள். சில பேர் கேள்விகளையும் கேட்டார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் என்னை இங்கு கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள் என்பதையும் நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
எனக்கு முன்னாலே பேசியவர்கள் அனைத்து அம்சங்களையும், அனைத்து நியதிகளையும் தெளிவாக இங்கே எடுத்துரைத்தார்கள். இருந்தாலும் நானும் சொல்கின்றேன். நம்முடைய இயக்கத்தில் வந்த இரு மாபெரும் தலைவர்கள் …. 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ வேண்டிய நம்முடைய தலைவர்கள், கழகத்திற்காக கடமையோடு பணியாற்றி, இன்று நம்மை விட்டு மறைந்து இருந்தாலும், அவருடைய நினைவு நம் உயிர் உள்ளவரை என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்ற நிலையை அவர்கள் நமது இதயங்களில் உருவாக்கி சென்றிருக்கிறார்கள்.
அண்ணன் பண்ருட்டியார் அவர்கள் சொன்னது போல, எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் உலகத்தில் இல்லாத ஒரு சட்ட பிரிவை… கழகத்தினுடைய சட்ட விதியாக… கழகத்தில் புரட்சித் தலைவர் அவர்கள் உருவாக்கினார்கள். அதைத்தான் மாண்புமிகு அம்மா அவர்களும் தங்களுடைய வாழ்நாள் வரை நிறைவேற்றிக் காட்டினார்கள். பணம் படைத்தவர்கள், மிட்டா தாரர்கள், மிராசுதாரர்கள், ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் உச்சபட்ச பதவியை எட்ட முடியும் என்ற நிலையை மாற்றிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உச்சபட்ச பதவிக்கு இந்த இயக்கத்தினுடைய சாதாரண தொண்டர்கள் கூட வரலாம் என்ற விதியை உருவாக்கி, என்னை போன்றவர்கள் கூட உச்சபட்ச பதவிக்கு வரலாம், வர முடியும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தொண்டன் தான் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக வருவதற்குரிய காரண காரியங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய போது கொண்டு வந்தார்.
ஏன் என்று சொன்னால் ? அவரே திமுகவில் நடந்த அராஜக போக்கினால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து இனிமேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து தொண்டர்களால் உருவாக்கப்படுகின்ற பொறுப்புக்கு பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை சட்டமாக உருவாக்கினார்கள். அதைதான் 50 ஆண்டு காலம், நாம் நம்முடைய உயிரென மதித்து அத்தனை கழகத்தினுடைய தேர்தலையும் நடத்தி இருக்கிறோம்.
எந்த நோக்கத்திற்காக நம்முடைய தலைவர்கள் உருவாக்கிய சட்ட விதியை…. தொண்டர்களுக்காக தந்த உரிமையை… பறிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் எதிர்த்து நின்று குரல் கொடுத்து, அந்த இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த அந்த சட்டத்தை காப்பாற்றியே தீருவோம் என்று தொடங்கப்பட்டது தான் இந்த இரண்டாவது தர்மயுத்தம் என்பதனை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
அந்த வைராக்கிய உணர்வோடு நம் பக்கம் தான் தொண்டர்கள் இருக்கின்றார்கள் என்ற நிலையை நம்முடைய மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்களோடு இணைந்து அனைத்து கழகத்தினுடைய நிர்வாகிகளும்… திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான அந்த கூட்டத்தில் நிரூபித்துக் காட்டினீர்கள். வந்திருந்த கிட்டத்தட்ட ஒரு 3 லட்சம் பேரும் உணர்ச்சி பொங்க, எழுச்சியோடு அந்த கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் டெல்லியே நிலை திரும்பி பார்த்து, அந்த வரலாற்றை உருவாக்கியமாவட்ட கழகச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் கழகத்தினுடைய தலைமை பொறுப்பில் இருக்கின்ற நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம் என்பதனை இந்த நல்ல நேரத்தில் நான் பணிவோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.