திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ ஓமநல்லூரில் சாமுவேல்(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே இடப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 12-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாப்பா தனது கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.

இதனால் உடல் வெந்து சாமுவேல் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாப்பாவை நேற்று கைது செய்தனர்.