திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஜெ.ஜெ நகர் கீழ காலணியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் கடைசி மகன் முகிலன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வந்த முகிலன் சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது ஊஞ்சலில் இருந்து தவறி கீழே விழுந்து முகிலன் படுகாயமடைந்தான். அவனை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.