திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷ் நண்பர்களுடன் ஆலடியூரில் இருக்கும் சுடலைமாடசாமி கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்க இயலவில்லை. நேற்று காலை 2-வது நாளாக மீட்பு பணி நடந்தது. அப்போது நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் விக்னேஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.