தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு சமுத்திரபாண்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சமுத்திர பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை நீதிமன்றம் சமுத்திர பாண்டிக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.