தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி துறையும், ED துறையும் தமிழக அமைச்சர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதுவரையில் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் வேலு உள்ளிட்டோர் வீடு அலுவலகங்களில் சோதனை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் ஆறு அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கான ஆதாரங்களை தயாரிக்கும் பணியில் IT, ED துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இது திமுக அமைச்சர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.