சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து ஆறு பேரை ஏற்றிகொண்டு ஆட்டோ மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை பவுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழே வைத்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் பவுல் முந்தி செல்ல முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பவுல் உள்பட ஏழு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீசார் விபத்துக்குள்ளான ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.