கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடையில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கரும்பு கடையைச் சேர்ந்த நூர்புல் தவுசிப் என்பவர் 23 வயதுடைய எனது மகளுடன் பழகி வந்தார். அவர் எனது மகளை வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து நூர்புல் நடவடிக்கை சரியில்லாததால் எனது மகள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

அதற்கு நூர்புல் நீ என்னிடம் பேசவில்லை என்றால் உனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி எனது மகளை மிரட்டியுள்ளார். அதன் பிறகும் எனது மகள் பேசவில்லை. இதனால் கோபத்தில் அவர் எனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் நூர்புல் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.