ANI செய்தி நிறுவனம்  வெளியிட்ட ட்விட்டர் X பதிவில், பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது, “வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானின் மஸ்துங்கில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மஸ்ஜித் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களை உறுதிப்படுத்தும் வகையில்,  ஈத் மிலாத்-உன்-நபியைக் கொண்டாடுவதற்காக வழிபாட்டாளர்கள் அணிவகுத்துக் கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக மஸ்துங் உதவி ஆணையர் அத்தாஹுல் முனிம் தெரிவித்துள்ளார்.