கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.