சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் நடன ஆசிரியரான வேணுகோபால் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் பள்ளிக்கு சென்று வேணுகோபாலை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேணுகோபாலை மீட்டனர். பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.