சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது எதிர்பாராதவிதமாக மாரியம்மாளின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது.

இதனால் அலறி துடித்த மாரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாரியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.