பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாபா குரு நானக் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் தான் பாபா குரு நானக். இவரது 554 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சுமார் 3000 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர்கள் 10 நாட்கள் அங்கு தங்கி இருந்து பாபா குரு நானக் ஜெயந்தி விழாவை முடித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.