விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள் தமிழ்ச்செல்வன், வீரப்பன் ஆகியோர் முனியனிடமிருந்து 37 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர்.

இதனை அறிந்த வசந்தி தனது தம்பி தியாகராஜனோடு இணைந்து தட்டி கேட்டார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரும் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.