கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்பாதநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான பாலசுப்பிரமணியனுடன் காரில் திருப்பூருக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய புறவழிச் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார் பாலசுப்ரமணியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.