தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது