நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செயல்படுவதாக மன்சூர் அலிகான் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார். தேனி தொகுதியில் போட்டியிட்டு அம்மாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரன் ஆகியோரை மண்ணை கவ்வ வைப்பேன் என்று மன்சூர் சூளுரைத்துள்ளார்.