சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் கோதண்டராமனின் தங்கையும் இருந்துள்ளார்.

இந்நிலையில் பெருங்குடி சுங்கசாவடி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கோதண்டராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.