தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று அழகேசன் வேலி கட்டுவதற்காக தனது கொள்ளை புறத்தில் எல்லையில் நட்டு வைத்திருந்த கருங்கல்லை அய்யனார் பிடுங்கி எரிந்துள்ளார். மேலும் அழகேசன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து அழகேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.