நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இவரது தந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரரின் முதற்கட்ட விசாரணையில் தந்தை இறந்த நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இவர் தற்கொலை செய்திருப்பது பெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.