சென்னை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி, மகன் ஹரிஷ் ஆகியோருடன் புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் பிரேக் பிடித்ததால் கார் மினி லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

மேலும்  திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து காரின் பின்புறம் மோதியது. அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஹரிஷுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.