கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை வைத்து விற்பனை செய்தது உறுதியானது.

இதனால் சாராயம் விற்பனை செய்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.