ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் குளத்து தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மகாதேவனுக்கும் தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது கமலக்கண்ணன் மகாதேவனை பிடித்து கீழே தள்ளினார்.

அப்போது வீட்டுப்படியில் தலை மோதி மயங்கி விழுந்த மகாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகாதேவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.