கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்/ அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், கர்ணன், கனகராஜ், துளசிராமன், கோபிநாத் மகேந்திரன், ராதா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண் குமார் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.