வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று  இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் விவேகானந்தரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டனர். இதனையடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.